தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 januari 2014

LTTE முக்கியஸ்தர் தப்பித்து சுவிஸ் சென்று! மீண்டும் தப்பித்தார்..

மீண்டும் காவற்துறை கைது செய்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்!

பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான சிவராசா பிரகாஷ் என்பவபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர் முன்பு இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்ததுடன் சில வருடங்களுக்கு முன்னர் இரகசியமான முறையில் இலங்கை திரும்பியிருந்தார்.
நாடு திரும்பிய இவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 13 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்றும்,
இவர் யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் பிரதேசத்தை சேர்ந்தவர். தப்பிச் சென்றுள்ள இவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் பற்றிய சகல தகவல்களும் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.

 http://www.jvpnews.com/srilanka/58944.html

Geen opmerkingen:

Een reactie posten